என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு அதிகாரி"
- பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
- உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் உத்தரவின் பேரில் பரமத்திவேலூரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள் மற்றும் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாதம் மற்றும் மீதமாகி போன உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அளித்தனர். ஆய்வுக்கு பின்னர் சில உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்